ஓரத்தில் ஈரம் பட்டு
சிதறிய தினசரிகள்
போர்டில் எழுதிய குறளும்,
சந்தா நோட்டிசும்
நனைந்தபடி குளிரில்
வழக்கத்தை விட
நெருக்கியடித்தபடி
புத்தகங்கள்
அடங்காத ஜன்னல்களோடு
போராடும் ஊழியர்
மாவட்டக் கிளை நூலக
போர்டின் மேல் விழுந்த
மரக்கிளை
நூல் போலவே பெய்தது
வார்த்தைகள் உறங்கும்
நூலகத்தின் மேல்
மழை !
நூல் மழை
Published inUncategorized
Be First to Comment