” இன்னும் கொஞ்சம்
நேரம்மா ! ப்ளீஸ்மா !”
என்றபடி பலமுறை கெஞ்சியபடி
புது நண்பர்களின் கால்களை
மீண்டும் மீண்டும்
பால் நுரையால் நிறைத்து,
பாதங்களின் கீழ் மண் அரித்து
பின்னும் முன்னும்
விளையாடிக் கொண்டிருந்தது
அலைக் குழந்தை..
ஆழி அன்னையின்
சொல் கேளாமல் !
Be First to Comment