வாழையிலையில் பிரியும்
பச்சைக் கோடுகள்
மழை முடிந்த மாசற்ற
தென்னங்கீற்றுகள்
கருப்பு அருவியின்
உள்பக்கம்
நெய்பவரின் தோளில்
பட்டு நூல் குவியல்
காற்றில் அலையும்
சரக்கொன்றை கொத்துகள்
இப்படியெல்லாம்
பார்த்ததை விட
வனப்பானது
ஈரிழைத்துண்டுடன்
ஈர முடிக்கற்றைகளும் சேர
சுற்றிய பின்னலும்
பின் கழுத்து ஈரத்துடன்
நீ எழுப்பிய
ஏதோ ஒரு பண்டிகையின்
காலைபொழுதும்
Be First to Comment