சில நூறு
கேள்விகளோடு
கோவில் பிரகாரத்தில்
நான்
வயது வந்து மனதளவில்
வளராதப் பெண் குழந்தையோடு
விளக்கேற்றும் பெண்மணி,
கூட வந்தவர் துணையோடு
ஆரத்தி ஒற்றிக்கொண்ட
பார்வையில்லாதவர்,
கலசத் திருட்டை விசாரிக்க
சாக்சோடு சுற்றிய
போலீஸ்காரர்
பல நூறு
கேள்விகளோடு
வெளியே வந்தேன் நான்
Be First to Comment