தெரிவது என் மேல் பனி
தெரிவதில்லை
என்னுள் கூர் முனை சிகரம்
தெரிவது என் புன்னகை
தெரிவதில்லை
என் வளைந்த நகங்கள்
தெரிவது என் ஒப்பனை
தெரிவதில்லை
அதன் கீழ் என வடுக்கள்
தெரிவது என் வாள் உறை
தெரிவதில்லை
அதனுள் உறைந்த ரத்தம்
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment