மண் தெருவில் பட்டு நூல்
பிரித்துக் காய வைப்பதில்லை
மின் தறி போட்டு
கட்டுப்படியாகவில்லை
பட்டுச் சேலை தரகு வேலையில்
பெரிய வருமானமில்லை
தாழ்வாரத்தை அடைத்துப்போட்ட
பழைய தறியில்
தன் வீட்டைத் தானே
நெய்யும் சிலந்தியை
சக நெசவாளியெனக் கொண்டு
கலைக்க மனமில்லாமல்
வேடிக்கை பார்த்தபடி
தட்சிணாமூர்த்தி
பொங்கலுக்கு ரேஷனில்
கிடைத்த அச்சடித்த
வேஷ்டி கொடியில் காயும் வரை
Be First to Comment