புதிதாய் பிறந்த குழந்தை போல்,
காற்றுக்கும் மேகத்துக்கும்
எண்ணமில்லாமலும்.
வண்ணமில்லாமலும்
பிறந்தவன் நான்
விழுவதும் எழுவதும்
என்னியல்பு
தாமரையிலை என்னைச் சேர்க்காது
இருந்தாலும் விழுவேன்
செம்மண் என்னைப் பழுப்பாக்கும்
இருந்தாலும் விழுவேன்
கடல் என்னை உப்பாக்கும்
இருந்தாலும் விழுவேன்
மீண்டும் மீண்டும் மேகமாய் எழுவேன்
மழையாய் விழுவேன் –
பம்புசெட்டு அறையின் மேலிருந்து
கிணற்றில் விழும்
சலிக்காத சிறுவன்
போலவே !
காற்றுக்கும் மேகத்துக்கும்
எண்ணமில்லாமலும்.
வண்ணமில்லாமலும்
பிறந்தவன் நான்
விழுவதும் எழுவதும்
என்னியல்பு
தாமரையிலை என்னைச் சேர்க்காது
இருந்தாலும் விழுவேன்
செம்மண் என்னைப் பழுப்பாக்கும்
இருந்தாலும் விழுவேன்
கடல் என்னை உப்பாக்கும்
இருந்தாலும் விழுவேன்
மீண்டும் மீண்டும் மேகமாய் எழுவேன்
மழையாய் விழுவேன் –
பம்புசெட்டு அறையின் மேலிருந்து
கிணற்றில் விழும்
சலிக்காத சிறுவன்
போலவே !
Be First to Comment