மூச்சிலே முகில்கள்
கலைத்தாய் – பார்வை
வீச்சிலே என் இரவுகள்
எரித்தாய்
உன் வனப்பிலே என் வசம்
இழக்க வைத்தாய்
உடல் மேலெழ
மார்க்கச்சை தெறிக்க வைத்து
மூட்டி வைத்தாய்..
என்னுள் ஒரு பெருந்தீ
பச்சை பசேலென.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
தூர்வாரப் படப்போவது
தெரியாமல்
கரை மேல் நின்றிருக்கும்
ஜேசிபியைப் பார்த்து
உற்சாகமாய் தலையாட்டியபடி
நீர் தெறிக்க,
காற்றில் மடியும் இலைகள்,
மடலவிழும்
தாமரைப்பூக்கள்