விடியும்போது
ஆரம்பித்து விட்டது..
நடை திறக்காத கோவில்
நிரம்பி, மேலும்
சின்ன வளையங்கள்
உண்டாக்கியபடி
குளம்
நனைந்த கொடிமரம்
தேர் நிறுத்திய
தகர கொட்டகையின்
மேல் நீரின் தாளம்
எப்படி இருந்தாலும்
நூறு கால் மண்டப
வவ்வால்கள் கேட்டதெல்லாம்
பெரும்சப்தம்
தலைகீழ் மழையால்.