ஔரங்கசீப்பின் உருவம்
மகனுக்காக வாங்கியவெள்ளை நிறசென்ட் ரப்பரில்பால்யத்தில்,என் எண்ணைத்தலையில்ரப்பரைத் தேய்த்துவரலாற்றுப் புத்தகத்தில்வைத்து அழுத்தியெடுத்தஔரங்கசீப்பின்உருவம்தோன்றி மறைந்தது.
[ read more ]
வீ ஆர் எஸ்
சமனில்லா கூர்முனைகளுடன் கரடு முரடாகவே தொடங்கியது என் நீர் யாத்திரை வெவ்வேறு ட்ரான்ஸ்ஃபரில் வெயில் தாங்கி, சிறு மழை தேக்கி, அடர் காட்டில், அருவிக்கடியில், படித்துறை பக்கத்தில் கூர்முனைகள் தேய உருண்டு பல வருட முடிவில் சந்தன மாலையும், பிரேம் போட்ட மடலும் வாங்கி முனைகளற்ற கூழாங்கல்லாய் தற்போது பணியின் முடிவில் நிற்கிறேன் பழகிய நீரின் குளிர்ச்சியை உடலெங்கும் த
[ read more ]
வேறொரு தெரு வழியே
கான்ஸ்டெபிளாக இருந்துகணித ஆசிரியரானவர் அவர்கணிதம் விரைவாக முடித்துவிட்டுசட்டோபாத்யாய் கமிஷன் பற்றியும்தொழிற்சாலைகள் பற்றியும்படிப்பிற்கு வெளியேபடிக்க வேண்டியது பற்றியும்சொல்லித்தந்தவர்பின்னொரு நாளில் ஏதோ காரணத்துக்காகதன் மூச்சைதானே நிறுத்திக்கொண்டார்எனக் கேட்ட பிறகுஅவர் வசித்த தெருவைத் தவிர்த்துசுற்றிக் கொண்டு போ
[ read more ]
கேம்ஸ் பாயிண்ட்
பெரிய மால் ஒன்றில், விடீயோ கேம்ஸ் பிரிவின் செக்யுரிட்டி , நேபாளத்திலிருந்து வந்தவன் பகலெல்லாம் கார்டு தேய்த்து, பணம் கொட்டி, ஆடும் குடும்பங்கள், அவனைக் குழப்பும் பின்னிரவில் எல்லாம் மூடிய பின் பெரிய சுத்தியல் வைத்த பலம் சோதிக்கும் மெஷினில் வெறும் சுத்தியலால் அடித்து கோபம் தணிப்பான் ஊரில் விட்டு வந்த குழந்தைகளையும், தன் இயலாமையையும் நினைத்து பாயிண்டுகள் எ
[ read more ]
அனல் நதிகள்
தீண்டி உருவானதொரு தீயால் தகித்து துவளும் தாமரை தேகம் உரசிய உதடுகளால் எரியும் பருவம் பெருகும் அனல் நதிகள் தணல் அடங்கிப் பிரியும் முன் மணல் வழி இறங்கும் நீராய் நெற்றியில் உன் முத்தத்தால் சொருகும் என் கண்ணில் தெரியும் மேலும் ஓர் இரண்டாம் உலகம் !
[ read more ]
வானம் - 2
பகல் முடிவில் - உடை நிறம் மாற்றியது வானம், வெட்கத்தால் சிவந்து கடலில் ஒளிந்தது சூரியன்.
[ read more ]
கணம்
இரவின் கருப்பில் வாகனத்து முன் விளக்கின் நேர்க்கோட்டு வெளிச்சத்தில் செவ்வகமாய்த் தெரிந்த மஞ்சள் அடர் மழை போல் கதவிடுக்கு வழியே உன்னைப் பார்த்த கணம் உடல் மெழுகு உருகி உயிர்ச்சுடர் கண்சிமிட்டி அசைந்தபடி எரிந்தது போல் ஒரு குடைக்குள் நெருங்கி, எதிர்பாராமல் உன்னை முத்தமிட்ட கணம் மல்லிப் பூக்குவியலில் விழுந்து மறைந்த எடைக்கல்லாய் நம்முள் நாம் தொலைந்த கணம
[ read more ]
ஜவுளிக்கடல்
பம்புசெட் அறை,பள்ளி மற்றும் ரைஸ்மில் சுற்றுச்சுவர்,கூட்டு ரோடு மரங்கள்,நெடுஞ்சாலை கோயில்,தியேட்டர் சைக்கிள் ஸ்டாண்ட்,தேர் வைத்து பூட்டிய கதவுகள்இவையெல்லாம்சில்க் ஹவுஸ் விளம்பரங்களால்செய்யப்பட்டவை.
[ read more ]
திருநிறைசெல்வி
வேலை முடிஞ்சு வந்தப்புறம்பாட்டு கேட்பீங்களா ?எப்பவாச்சும்படம் ?எப்பவாச்சும்வரையறது, கோலம், கோயில்?கம்மிதான்புஸ்தகம் ?கொஞ்சம் தான்பொழுது போக்கே இல்லையா ?தன் பெயர் மட்டும் வைத்து வித விதமான கல்யாணபத்திரிகைகள் செய்வதைமறைத்து சொன்னாள்வயர் கூடைபின்னுவேங்க.
[ read more ]
வண்ணத்தட்டு
மயில் கழுத்து, குங்குமம், வெந்தயம், காப்பி, வெங்காயம், கத்திரிப்பூ, ராமர், மாம்பழம், சிமென்ட், மாந்துளிர், அரக்கு, பஞ்சுமிட்டாய், கனகாம்பரம், செம்மண், சாம்பல் இவை யாவும் வார்த்தையாகவும், வெறும் பொருளாகவும் புரிந்திருந்த வயதில் புடவைக்கடக்காரரிடம் அம்மா, நிறமானிக்கும் புரியாதபடி பேசிப்பேசி அவற்றின் இயல்பு மாற்றியமைத்தாள் என் வண்ணத் தட்டின் சிறு வட்டங்களில், நி
[ read more ]
கற்றதும் விட்டதும்
இடது பக்கம் கைக்குட்டை வைக்க,வலது பக்கம் பர்ஸ் வைக்க,அதிக பணத்தை டிக் பாக்கட்டில் வைக்க,கை வைத்த பனியன் போட,சிவாஜி, கமல், சுஜாதா ரசிக்க,துப்பறியாத வாரப் பத்திரிகை படிக்க,முகச்சவரம் செய்து அதன் பின்படிகாரம் போட்டுக்கொள்ள,கூட்டமில்லாத கடையில் துணியெடுக்க,இஸ்திரி பண்ண,சுத்தமாக இருக்க,குழந்தைகளைக் கொஞ்ச,எல்லாம் பார்
[ read more ]
அதிர்வு
ரயிலின் அதிர்வுக்கு மட்டும் தடதடத்துப் பின் அமைதியாகிடும் இருப்புப் பாதையருகே பூத்த எருக்கம்பூக்கள், மனைவி பேச, கேட்க மட்டும் முடிந்த கணவன் போல.
[ read more ]
கண்டக்டர் ஷண்முகம்
பஸ் பாஸ் டிக்கடித்துபெருமையாக டோக்கன்உபயோகித்த காலத்தில்காக்கி சீருடையில்கண்டக்டர் ஷண்முகம் எனக்கு அறிமுகம்வேலைக்கு சேர்ந்த காலத்தில்பஸ் நம்பர் பார்க்காமல்பக்கவாட்டில் இருக்கும்டெப்போ நம்பரின் பரிச்சயத்தில்பஸ் பிடித்த காலத்தில்நீலச்சீருடையில் அதே ஷண்முகம்பிள்ளையோடு வால்வோ பஸ் பிரயாணங்களில்பார்க்க நேரிடும்செக்
[ read more ]
ஆனாலும்
தெப்பம் விடப்படுவதில்லை தாமரை பூப்பதில்லை தளும்பும் அலைகளில்லை ஏரிக்கரை சாலை பஸ்ஸின் பிம்பம் விழுவதில்லை ஆனாலும் சுவற்றுப் பிளவில் சிரித்தாடும் ஆடும் எருக்கஞ்செடி பார்த்தபடி குளிர்ந்தே இருந்து விடுகிறது கிணற்று நீர் கிணற்றோடு
[ read more ]
சிரமம்
இடது கையால் எழுதுவதுபோல்,மாநகரப் பேருந்தில்குடும்பத்துடன் போவது போல்,அறுந்த செருப்புடன்நடப்பது போல் சிரமப்படுகிறேன்காதல் கவிதை எழுத.
[ read more ]
குளக்கரைப் பிரிவு
நிசப்தமான இரவின் நிழலில் குளக்கரை நிலவொளியில் நிகழ்ந்தது நம் பிரிவு முதலில் நீரிலலைந்து கலங்கிபின், சரியாகிவிடும் நிலவின் வடிவமென சில வாரங்களில் உன் வாழ்வு மேலும் குளிர்ந்து இறுகிவிடும் கல் படிக்கட்டாகிவிடும் பல வருடங்களில் என வாழ்வு
[ read more ]
மெதுவாய்
பெருமரத்தில் தடம் பதிக்காமல் பாவும் எறும்பின் பயணம் குளத்தின் நீர்பரப்பைத் தொடாமல் பரவும் பனிப்புகை ஆற்று மணலை அசைக்காமல் இறங்கும் மழை நீர் கோயில் மணி அதிர்வில் மெதுவாய் உதிரும் பூவரசம்பூ இப்படித்தான் என்னில் நுழைந்தது உன் நினைவுகள்
[ read more ]
அட்சய பாத்திரம்
அஞ்சோ பத்தோகாசுகள்,மந்தாரையில் கட்டியநீட்டு காராசேவு,கோடி வீட்டில்கல்யாணத்தில்வைத்த ஆயிரங்கண்மைசூர்பாகு,இனிப்பு பாக்கு,ஏதோ ஒன்றைஎப்படியோஎடுத்துக் கொடுப்பாள்ஆயாஅட்சயப் பாத்திரத்தைஅடுக்குப்பானையாகஉருவகம் செய்யஆரம்பித்தது அப்படித்தான்.
[ read more ]
தேர்ட் டிகிரி தமிழ் வாத்தியார்
எல்லா ஆசிரியருக்கும்ஒரு முறையிருக்கும்தமிழ் ஐயா பற்றிக்கேள்விப்பட்டதுமட்டும்பயத்தைக் கூட்டியதுஉச்சரிப்பு சரியில்லையென்றால்பூனைக்காசல்இலையைத்தடவிவிடுவாராம்,நாக்கில்.
[ read more ]
Be First to Comment